சுவையான இறால் மீனை, சத்தான முள்ளங் கியுடன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிரம்ப கிடைக்கும். செய்து பார்க்க லாமே…
தேவையானவை
இறால் – 1/2 கிலோ
முள்ளங்கி – 1/4 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
தேங்காய் துருவல் – 1/4 மூடி
பட்டை – 2
லவங்கம் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதாக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை நறுக்கவும், மிளகாயை கீறிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். இப்போது இறாலைச் சேர்த்து வதக்கவும். முள்ளங்கியைச் சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும்.
* தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.
* முள்ளங்கி யும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.