மட்டன் நீலகிரி குருமா செய்முறை / Mattan Nilgiri Kurma Recipe !





மட்டன் நீலகிரி குருமா செய்முறை / Mattan Nilgiri Kurma Recipe !

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணி களை ருசியால் கட்டிப் போடும் சைடு டிஷ்களில் குருமாவும் ஒன்று. 

மட்டன் நீலகிரி குருமா

இந்த வாரம் நாம் நீலகிரி பாணியில் மட்டன் குருமா செய்யக் கற்றுக் கொள்வோம். 

தேவையான பொருட்கள் 

மட்டன் – 200 கிராம் 

வெங்காயம் – 100 கிராம் 

தக்காளி – 100 கிராம் (நறுக்கியது) 

பட்டை – 2 கிராம் 

லவங்கம் – 2 கிராம், 

ஏலக்காய் – 2 கிராம் 

பச்சை மிளகாய் – 10 கிராம் 

சோம்பு – 5 கிராம் 

பூண்டு – 25 கிராம், 

இஞ்சி – 25 கிராம் 

மிளகாய்த் தூள் – 10 கிராம் 

தனியா – 15 கிராம் 

தேங்காய் – 1/2 மூடி 

கொத்த மல்லி – ஒரு கட்டு 

எண்ணெய் – 50 மில்லி 

உப்பு – தேவைக்கேற்ப 

செய்முறை 

மட்டன் குருமா

* இஞ்சி, பூண்டு, வெங்காய த்தை விழுதாக்க வும். தேங்காய், பச்சை மிளகாய், கொத்த மல்லி இவற்றை தனியே அரைக்கவும், 

* மட்டனை சுத்தம் செய்து நறுக்கி, தயிரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும். 
 * வெங்காய விழுதை வதக்கவும். தக்காளியை வதக்கி ஏனைய மசாலா பொருட் களை சேர்க்கவும். நன்கு `பிரை` செய்யவும். 

* மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவை விழுதைச் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும். 

* மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கறி மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும். 

* நறுக்கிய கொத்த மல்லி இலையைத் தூவி அலங்கரிக்கவும். சாதம், தோசை க்குத் தொட்டுக் கொள்ள இந்த குருமா சுவையாக இருக்கும். 
இதே முறைப்படி மட்டனு க்குப் பதிலாக சிக்கன், மீன், நண்டு இவற்றை பயன் படுத்தியும் குருமா செய்யலாம்.
Tags: