தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்,
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
பாசிப் பருப்பு – முக்கால் கப்,
பனீர் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாசிப் பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக அரைக்கவும்.
வாணலி யில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும்.
பிறகு, அரைத்த பாசிப் பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்தி களாக திரட்டவும்.
ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்ப ருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து
ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.