தேவையானவை :
மக்ரோனி – 100 கிராம்
தக்காளி – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தனியா – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1/2 அங்குலத் துண்டு
பூண்டு – 6 பல்
தேங்காய் துருவல் – 1 கப்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லி, புதினா – சிறிதளவு
செய்முறை :
* வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து வடி கட்டவும்.
* வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும்
இஞ்சி- பூண்டு, 2 பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும்.
* தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.
ஆற வைத்து நைஸாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங் களுக்கு மேல் கொதிக்க விடவும்.
இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும். சூடான சாதம் சப்பாத்தி, பூரியுடன் பரிமாற ஏற்றது.
குறிப்பு
* சப்பாத்திக்கு ஏற்ற `சைடு டிஷ்` இது.
* எல்லா வற்றையும் நன்கு வதக்கி தயாரிப்ப தால் இந்த குருமா தனி சுவையுடன் இருக்கும்.
* எல்லா வற்றையும் நன்கு வதக்கி தயாரிப்ப தால் இந்த குருமா தனி சுவையுடன் இருக்கும்.
* மக்ரோனி மசாலா மாதிரியும் தயாரித்துக் கொள்ளலாம்.