தேவையானவை;
கேரட் - 2
பச்சைப் பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
பூண்டு - 3 பல்
மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
அரைக்க :
சோம்பு - அரை டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
அடி கனமான வாணலி யில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காய த்தைச் சேர்த்து வதக்குங்கள்.
பிறகு பூண்டு, தக்காளி இரண்டை யும் சேர்த்து வதக்கி, கேரட்டைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு கப் தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, பச்சைப் பட்டாணி ஆகிய வற்றைச் சேர்ந்து மூடி வைத்து வேக வையுங்கள்.
காய்கள் வெந்ததும் அரைக்கக் கொடுத்த வற்றை அரைத்துச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித் தழை தூவிப் பரி மாறுங்கள்.
இந்த கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட டிபன் வகை களுடன் சாப்பிட ஏற்றது.