ஹைதராபாத் கோழி வறுவல் செய்வது எப்படி?





ஹைதராபாத் கோழி வறுவல் செய்வது எப்படி?

இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு. 
ஹைதராபாத் கோழி வறுவல் செய்வது எப்படி?
ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. 

சரி இனி கோழிக்கறி பயன்படுத்தி டேஸ்டியான ஹைதராபாத் கோழி வறுவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை  :

கோழிக்கறி – ஒரு கிலோ 

பெரிய வெங்காயம் – 2 

தேங்காய் – ஒரு மூடி 

உலர்ந்த மிளகாய் – 10 

பட்டை – சிறு துண்டு 

கசகசா – ஒரு தேக்கரண்டி 

சோம்பு – ஒரு தேக்கரண்டி 

ஏலக்காய் – 2 

நெய் – சிறிது 

கறிவேப்பிலை – சிறிது 

தக்காளி – அரைக் கிலோ 

பூண்டு – 5 பல் 

சர்க்கரை – 2 தேக்கரண்டி 

மிளகுத் தூள் – அரைத் தேக்கரண்டி 
உப்பு – தேவையான அளவு 

செய்முறை  :
ஹைதராபாத் கோழி வறுவல்
கோழிக் கறியை சுத்தம் செய்து துண்டு களாக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காய த்தையும், ஒரு மூடித் தேங்காயையும் எரியும் நெருப்பின் மீது வாட்டவும். வெங்காய த்தின் தோலை நீக்கவும். 

தேங்காய் மூடியில் இருந்து தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கருகிய பாகத்தை நீக்கி விடவும். வாணலியை காய வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விடவும். 

நெய் சூடேறியதும் பட்டை, சோம்பு, மிளகாய், கறிவேப்பிலை, ஏலக்காய், கசகசா, தேங்காய்த் துருவல், வெங்காயம் ஆகிய வற்றைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்துக் கொள்ளவும். 
வக்கிரத்தின் உச்சம் - இந்த இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை !
அரைக் கிலோ தக்காளியைத் துண்டு களாய் நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை உரித்துக் கொள்ளவும். அடிக் கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தக்காளியை யும், பூண்டையும் மிதமான தீயில் வதக்கவும். 

சிறிது நேரத்திற்கு பிறகு தீயைக் கூட்டி நன்கு கொதிக்க விடவும். குழம்பு பதமாய் வந்தவுடன் இறக்கி ஆறவிட்டு, பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
பிறகு இதனுடன் சர்க்கரை, ஒரு தேக்கரண்டி உப்பு, அரைத் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு கெட்டியான வுடன் இறக்கி தனியே வைத்துக் கொள்ளவும். இதனை கடைசி யில் பயன்படுத்த வேண்டும். 

ஒரு வாணலியில் 2 மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோழிக்கறித் துண்டு களைப் போட்டு வதக்கவும். 

சிவக்க வதக்கியப் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவை யான உப்பும் சேர்த்து வேக விடவும். 

கோழிக்கறி வெந்ததும், தயாரித்து வைத்துள்ள தக்காளிக் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கி விடவும். கொத்த மல்லித் தழையைத் தூவவும்.
Tags: