ஆம்சூர் அல்லது மாங்காய் பொடி சட்னி மற்றும் மசாலா பொருள்களில் பயன்படுத்தப் படுகிறது. இது கடைகளில் எளிதாக கிடைக்கிறது. இதை வீட்டிலும் செய்யலாம். இது ஆரோக்கியமானது.
எடை இழப்பு முதல் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆம்சூர் அல்லது மாங்காய் பொடி பழுக்காத மாம்பழங்களிலிருந்து இவை தயாரிக்கப் படுகிறது.
பழுப்பு நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிற உலர்ந்த மாம்பொடி கசப்பும் இனிப்பு சுவையும் கொண்டது. இதை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே தயாரிக்கலாம்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த காக்ரா சாட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒரு கப்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
அம்சூர் பவுடர் (மாங்காய் தூள்) - அரை டீஸ்பூன்,
மிளகுத் தூள் - - டீஸ்பூன்,
சீரகத்தூள் - டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு,
நெய், உப்பு தேவையான அளவு.
மேலே தூவ :
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று,
ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு,
சாட் மசாலா, உப்பு - சிறிதளவு.
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திர த்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், ஓமம், அம்சூர் பவுடர், மிளகுத் தூள், சீரகத் தூள், எண்ணெய், உப்பு சேர்த்து நீர் விட்டு, சப்பாத்தி மாவைவிட சற்று இறுக்கமாக பிசையவும்
(கெட்டியாக பிசைந்து கொள்ளவும்). பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்தி யாக இடவும்.
கனமான தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் சிறிதளவு ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு பொன்னிறமாக சுடவும்.
பிறகு, மெல்லிய சுத்தமான துணியை சுருட்டி, சப்பாத்தியின் மேல் வைத்து அதன் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது போல் சீராக அழுத்தம் தரவும். சப்பாத்தி பழுப்பு நிறமாகும் போது, திருப்பிப் போடவும்.
சப்பாத்தி முறுகலாக, மொறு மொறுப்பாக வரும் போது எடுத்து தனியாக வைக்கவும். தட்டில் ஒரு சப்பாத்தியை வைத்து அதன் மீது பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி, உப்பு, சாட் மசாலா தூவி சாப்பிடலாம்.
அருமை யான சாட் காக்ரா சாட் ரெடி. இந்த சப்பாத்தி சில நாட்கள் வரை நன்றாக இருக்கும். சப்பாத்தி மேக்கரிலும் இதை செய்யலாம்.
நன்மைகள்
செரிமானத்துக்கு உதவும்.
டைப்2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
இதய ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யகூடியது.
சருமத்துக்கு நன்மை பயக்க கூடியது.
சிறுநீரக கோளாறு க்கு சிகிச்சையளிக்கிறது.
மன அழுத்தத்தை தடுக்கிறது.
குடல் இயக்கத்தை சரி செய்கிறது.