ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை செய்வது எப்படி?





ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை செய்வது எப்படி?

மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 
ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை
சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். 

நாளை (சன்டே) ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து அசத்துங்கள். 
தேவையான பொருட்கள் : 

மீன் – 8 துண்டுகள் (துண்டு மீன்) 

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி 

எண்ணெய் – தேவையான அளவு 

உப்பு – தேவையான அளவு 

மசாலாவிற்கு… 

வெங்காயம் – 1 

பூண்டு – 5 பல் 

இஞ்சி – 1 இன்ச் 

சீரகம் – 1 டீஸ்பூன் 

தனியா – 1 டீஸ்பூன் 

சோம்பு – 1 டீஸ்பூன் 

வர மிளகாய் – 4 

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் 

கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன் 
செய்முறை : 
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். 

வாணலியை அடுப்பில் வைத்து சூடாதும் அதில் 1 ஸ்பூன் ஊற்றி மசாலா விற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்னர் அந்த மசாலா வுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப் பிலை சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும். 

பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெ யில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிற மாக வறுத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை ரெடி!!!
Tags: