மாலையில் வீட்டில் உள்ளவர் களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு பக்கோடா செய்து கொடுக்க லாம்.
இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
கொத்த மல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவை யான அளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்த மல்லி, கறிவேப் பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திர த்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம்,
பச்சை மிளகாய், கொத்த மல்லி, இஞ்சி – கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக் களாக பொரித்துக் கொள்ளவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.