ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?





ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

தேவையானவை: 
ஆட்டுக்கால் - 200 கிராம் 

பாஸ்மதி அரிசி - 1 கிலோ 

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3 

சீரகம் - 1 டீஸ்பூன் 

கரம் மசாலாத் தூள் - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய்த் தூள் - ஒன்று டேபிள் ஸ்பூன் 

ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன் 

இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன் 

தயிர் - 100 மில்லி 

முந்திரி - 50 கிராம் 
மஞ்சள் தூள் - 5 கிராம் 

குங்குமப்பூ - சிறிதளவு 

கொத்த மல்லித் தழை - 50 கிராம் 

புதினா இலை - 50 கிராம் 

காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 100 மில்லி 

நெய் - 50 மில்லி 

பட்டை - 2 

ஏலக்காய் - 4 

எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்) 

கிராம்பு - 4 

பிரிஞ்சி இலை - ஒன்று 

உப்பு - தேவையான அளவு 
செய்முறை: 

ஹைதராபாத் ஆட்டுக்கால் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, 
நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். 

பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திர த்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு, தயிர், உப்பு சேர்த்து கலக்கி, ஆட்டுக் காலைச் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். 
அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிற மாக வதக்கவும். 
இதில் கரம் மசாலாத் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி யதும், 

ஊறிய ஆட்டுக் காலைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 

இத்துடன் வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து... பின்னர் நெய், ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, கொத்த மல்லித் தழை, புதினா, குங்குமப்பூ, முந்திரி தூவி மூடவும். 
அடுப்பில் ஒரு பெரிய தோசைக் கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.
Tags: