தேவையான பொருட்கள்:
நண்டு – 1/2 கிலோ
அரைத்த தேங்காய் - ஒரு பிடியளவு
இஞ்சி பூண்டு – 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு ஜீரகத்தூள் – 3 ஸ்பூன்
கறி மசாலாத் தூள் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 6 ஸ்பூன்
உப்பு – தேவை யானது
முருங்கைக் காய் பெரியது – 1
வெங்காயம் பெரியது – 1
தக்காளி – 1
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
சுத்தம் செய்த நண்டு களுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டும் சிறிது உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி,
அத்துடன் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு ஜீரகத் தூள், கறி மசாலாத் தூள், மல்லித் தூள் அனைத்தை யும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திர த்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கீறிய ப. மிளகாயை தாளித்து, கால் பகுதி வெங்காய த்தை நீளவாக்கில் அரிந்துப் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் முறுக ஆரம்பித்த வுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப் பிலைப் போட்டு தாளிக் கவும்.
பிறகு மீதியுள்ள 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, அரிந்த தக்காளி யையும் மீதியுள்ள வெங்காய த்தையும் போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் குழைந்து வரும்போது பிரட்டி வைத்துள்ள நண்டு மசாலாவைக் கொட்டி வதக்கி, 3/4 டம்ளர் அளவு தண்ணீர்
மற்றும் தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு நறுக்கிய முருங்கைக் காயை நீள வாக்கில் கீறி விட்டு அத்துடன் சேர்த்து பிரட்டி, 2 நிமிடம் மட்டும் மீண்டும் மூடி போட்டு வைக்கவும்.
(அதிக நேரம் வைத்தால் முருங்கைக் காய் பழுத்து விடும்)
இப்போது முருங்கைக் காய் வெந்து விட்டதை உறுத்தி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய் சேர்த்து பிரட்டி விட்டு, சுமார் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான, சத்து நிறைந்த நண்டு முருங்கைக் காய் குருமா தயார்! சூடாக (வோ ஆறியோ கூட) பரிமாற சுவையாக இருக்கும்.
டிப்ஸ்:
நண்டு சமைக்கும் போது அதன் கால்களை வெயிட்டான கரண்டி போன்ற பொருளால் மேல் தோடு உடையு மளவு தட்டி விட்டு
அல்லது Nut Cutter கொண்டு மெதுவாக உடைத்து விட்டு சமைத்தால், அதன் உள்ளே மசாலா வின் சுவை நன்கு ஏறும். சாப்பிடும் போதும் சுலபமாக இருக்கும்.