தேவையானவை:
சீரக சம்பா அரிசி – ஒரு கப்,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு – 10,
வெங்காயத் தாள் – சிறு கட்டு,
தக்காளி – ஒன்று,
பிரிஞ்சி இலை – ஒன்று,
மிகவும் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 4 (கீறிக் கொள்ளவும்),
உப்பு, எண்ணெய் – தேவை யான அளவு.
செய்முறை:
சீரக சம்பா அரிசி யுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ள வும்.
வெங்காயத் தாள், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும்.
முந்திரியை பொடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலி யில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து,
பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறி, தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பொடித்த முந்திரி, நறுக்கிய வெங்காயத் தாள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு, உதிராக வடித்த சாதம் நறுக்கிய புதினா, கொத்த மல்லித் தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.