டேஸ்டியான மல்டி காய்கறி பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான மல்டி காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு ஏற்படும், உடல் எடை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதில், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப் படுவதுண்டு. 
மல்டி காய்கறி பிரியாணி
ஆனால், உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே வாயு, உடல் எடை அதிகரிப்பு எல்லாம் ஏற்படும். 
உருளைக்கிழங்கில் கார்போ ஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மை தான். 

ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வைட்டமின் சி, உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. 

அது போல, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும். 
இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உணவில் உருளைக்கிழங்கு வறுவல் இல்லாமல் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை பார்த்திருக்கலாம். 

ஆனால், உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற கவலை பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கிறது. சரி இனி டேஸ்டியான மல்டி காய்கறி பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையானவை: 

பாசுமதி அரிசி – 2 கப், 

வெங்காயம் – 2, 

தக்காளி – 4, கேரட், 

உருளைக்கிழங்கு – தலா ஒன்று, பீன்ஸ் – 8, 

காலி ஃப்ளவர் – சிறிதளவு, 

புதினா, கொத்த மல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, 

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், 

தேங்காய்ப் பால், தயிர் – தலா கால் கப், 
காய்ந்த மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப), 

பச்சை மிளகாய் – 2, 

இஞ்சி – சிறு துண்டு, 

பூண்டு – 8 பல், 

ஏலக்காய், லவங்கம் – தலா ஒன்று, 

முந்திரி – 12, 

சின்ன வெங்காயம் – 4 (தோல் உரிக்கவும்), 

பிரிஞ்சி இலை – ஒன்று எண்ணெய், 

நெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

வெங்காய த்தை நீள நீளமாக, மெல்லிய தாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், காலி ஃப்ளவர் ஆகிய வற்றை பொடியாக நறுக்கவும். 

புதினா, கொத்த மல்லித் தழையை மிக்ஸியில் ஒன்றி ரண்டாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஏலக்காய், 

கிராம்பு, முந்திரி, சின்ன வெங்காயம் ஆகிய வற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலையை சேர்த்து வதக்கவும். 
பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா விழுது, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, காலி ஃப்ளவர் சேர்த்துக் கிளறவும். 
இதனுடன் தயிர், புதினா, கொத்த மல்லித் தழை, தேவை யான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி… தேங்காய்ப் பால், 3 கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 

நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியைப் போட்டு, ஆவி வந்ததும் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். 

உருளைக் கிழங்கு குருமா வுடன் பரிமாறவும்.
Tags: