சைனீஸ் கடைகளில் கிடைக்கும் இந்தக் கீரையில், மற்ற கீரை களைப் போல மசியல், சாம்பார், பொரியல் எது செய்தாலும் நன்றாகவே உள்ளது.
கீரை ( Watercress) - ஒரு கட்டு
பச்சைப் பருப்பு (அ) துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 2
பூண்டு - 2 பற்கள்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
செய்முறை:
கீரையை ஆய்ந்து அலசி நீரை வடிய வைக்கவும். பச்சைப் பருப்பை வெறும் வாணலி யில் சிவக்க வறுத்து ஆறியதும் கழுவி விட்டு
ஒரு பாத்திர த்தில் எடுத்துக் கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, துளி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு சொட்டு விளக் கெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரமே குழைய வெந்து விடும்.
பருப்பு பாதி வேகும் நிலையில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.
எல்லாம் சேர்ந்து வெந்து வரும் போது கீரையைப் போட்டு வேக வைக்கவும்.இப்போது மூட வேண்டாம்.
சிறிது நேரத்திலேயே கீரை வெந்து விடும்.வெந்ததும் இறக்கி ஆற வைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மசிந்து விடும்.
ஒரு வாணலி யில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத் துள்ளப் பொருள் களைத் தாளித்துக் கீரையில் கொட்டி மேலும் ஒரு சுற்று சுற்றினால் போதும்.
இப்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை யான கீரை மசியல் தயார்.