தேவையான பொருட்கள்:
வெள்ளரிக் காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காரட் - 1
கொத்து மல்லி இலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (நடுத்தர அளவு)
உப்பு - 1/2 டீஸ்பூன்
அல்லது ருசிக்கேற்ற வாறு
தயிர் - ஒரு பெரிய கிண்ணம்
செய்முறை:
வெள்ளரி யின் தோல் மற்றும் விதைப் பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித் துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ள வும்.
தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகிய வற்றை
நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ள வும்.
பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக் கவும்.
கொத்து மல்லியை யும், வெங்காய த்தையும் பொடியாக நறுக்கிக் கொள் ளவும்.
தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
கடைந்த தயிரை ஒரு பாத்திர த்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவ ற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
சுவை யான தயிர் பச்சடி தயார்.