தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கிண்ணம் (இருவர் சாப்பிடும் அளவிற்கு)
கோவைக் காய் - 10 முதல் 15 வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
வறுத்து பொடிக்க:
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
கெட்டி பெருங்காயம் - ஒரு சிறு மிளகு அளவு (தூளாக இருந்தால் - ஒரு சிட்டிகை)
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வேர்க் கடலை - 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் வரை
முந்திரிப் பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
கோவைக் காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங் களாக நறுக்கிக் கொள்ளவும்.
தோசைக்கல் அல்லது அகல மான தாவாவை அடுப்பி லேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித் தனியாக பரப்பி வைக்கவும்.
அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப் பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் அவனிலும் வதக்கி எடுக்கலாம்).
வெறும் வாணலி யில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம் பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலி யில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய வற்றைப் போட்டு சிவக்க வறுத் தெடுத்து ஆற விடவும்.
ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொர கொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலி யில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.
கடுகு வெடிக்க ஆரம்பி த்ததும் கடலைப் பருப்பு, வேர்க் கடலை, முந்திரிப் பருப்பு ஆகிய வற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.
பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடவும்.
கறிவேப் பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள
கோவைக் காய் துண்டுகள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.
பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும்.
கடைசி யில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி, ஒரு டீஸ்பூன் எண்ணை யையும் விட்டு நன்றாகக் கலந்து இறக்கி வைக்கவும்.
தயிர் பச்சடி யுடன் பரிமாற வும்.