சோம்புக்கீரை வடை செய்முறை | Fennel leaves Vadai Recipe !





சோம்புக்கீரை வடை செய்முறை | Fennel leaves Vadai Recipe !

தேவையானவை:
 
கடலைப் பருப்பு - ஒரு கப்

வறுத்துப் பொடித்த ரோல்டு ஓட்ஸ் மாவு - ஒரு கப்

சோம்புக்கீரை - ஒரு செடியி லுள்ளது

சின்ன வெங்காயம் - சுமார் 10

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - 2

பெருஞ்சீரகம் - சிறிது பூண்டுப்பல் - 2

பெருங்காயம்

கறிவேப்பிலை & கொத்து மல்லி இலை

உப்பு - தேவைக்கு

கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவை யான அளவு

செய்முறை:

தண்டி லிருந்து கீரையைத் தனியாகப் பிரித் தெடுத்து தண்ணீரில் அலசி வைக் கவும்.

சோம்புக்கீரை வடை

பார்ப்பதற்கு சவுக்கு இலைகள் போலவே இருக்கிறது. தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீழேயுள்ள பல்பை வைத்து என்ன சமைக் கலாம் என்பதை இன்னும் முடிவு செய்ய வில்லை.

கடலைப் பருப்பை ஊற வைக்கவும்.நன்றாக ஊறிய பிறகு கழுவி விட்டு, மிக்ஸியில் அல்லது கிரைண் டரில் போட்டு  அதனுடன் மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொர கொரப்பாக, கெட்டியாக‌ அரை த் தெடுக்கவும்.
இந்த மாவுடன் ஓட்ஸ் மாவு, கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை & கொத்து மல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பி லேற்றி சூடானதும் மாவிலி ருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து உள்ளங்கை யில் வைத்து  வடை யாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்து விடவும். 
எண்ணெய் கொண்ட மட்டும் தட்டிப் போடலாம். இவ்வாறே எல்லா மாவையும் வடை களாகத் தட்டி எடுக்கவும். 

இப்போது கமகம,மொறு மொறு, சத்தான, சுவையான சோம்புக் கீரை வடைகள் தயார். தேங்காய் சட்னி அல்லது கெட்சப் புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
Tags: