தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப்,
குடமிளகாய் – 2,
வெங்காயம் – தலா ஒன்று,
தக்காளி – தலா ஒன்று,
புதினா, கொத்த மல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறு துண்டு,
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லிய தாக நறுக்கவும். குட மிளகாயை சதுர சதுரமாக கட் செய்யவும்.
பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலி யில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி…
இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் நறுக்கிய குட மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.