தேவையான பொருட்கள்:
சேனைக் கிழங்கு - பாதியாக வெட்டியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிது
புளி - ஒரு கொட்டை பாக்களவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
செய்முறை:
சேனைக் கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 அங்குல அளவிற்கு மெல்லிய வில்லை களாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய வில்லை களைக் கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் வேக விடவும். முக்கால் பங்கு வெந்தால் போதும். குழைய விடக் கூடாது.
புளியை சிறிது நீரில் ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் மிளகாய்த் தூள், மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் கெட்டியாகக் கரைத்த புளி ஆகிய வற்றைச் சேர்த்து, விழுது போல் ஆக்கிக் கொள்ளவும்.
தேவை யானால் சிறிது தண்ணீரையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப் பிலேற்றி காய விடவும். கல் காய்ந்ததும், அதில் சிறிது எண்ணை தடவவும்.
சேனைக் கிழங்கு வில்லைகள் ஒவ்வொன்றாக எடுத்து, மிளகாய் விழுதில் நன்றாக பிரட்டி எடுத்து, தோசைக் கல்லில் தனித் தனியாக வைக்கவும்.
அதைச் சுற்றி சிறிது எண்ணையை விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.
ஓரிரு வினாடிகள் கழித்து, ஒவ்வொரு வில்லை களாகத் திருப்பி போட்டு, மறு பக்கத்தையும் வேக விடவும்.
ஓரிரு வினாடிகள் கழித்து, ஒவ்வொரு வில்லை களாகத் திருப்பி போட்டு, மறு பக்கத்தையும் வேக விடவும்.
இவ்வாறே திருப்பி திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை வைத் திருந்து எடுக்கவும்.
சாம்பார் சாதம் / ரசம் சாதம் ஆகிய வற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
சாம்பார் சாதம் / ரசம் சாதம் ஆகிய வற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.