கோலாபுரி மட்டன் கறி செய்வது எப்படி?





கோலாபுரி மட்டன் கறி செய்வது எப்படி?

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட்,
கோலாபுரி மட்டன் கறி
விடுமுறை நாட்களில் குடும்ப த்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கோலாபுரி மட்டன் கறி.
நீங்கள் ஆரோக்கிய சாலியாக இருக்க உணவில் நல்லெண்ணெய் !
இந்த ஸ்பெஷல் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:
மட்டன் - அரை கிலோ

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

கொத்த மல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - 30 மில்லி

உப்பு - தேவைக் கேற்ப

அரைக்க: 
கடுகு எண்ணெய் தயாரிப்பது எப்படி?
முழுமல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெள்ளை எள் - ஒன்றரை டீஸ்பூன்

கசகசா - 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 8

கிராம்பு - 2

நறுக்கிய பெரிய வெங்காயம் - 50 கிராம்

தேங்காய்த் துருவல் - 30 கிராம்

செய்முறை: 
அடுப்பில் வாணலியை வைத்து, 10 மிலி எண்ணெய் சேர்த்துச் சூடானதும், அரைக்கக் கொடுத் துள்ள பொருட் களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுத்து, ஆற வைத்து,
நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்லும் “ஸ்ட்ராபெர்ரி” !
சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலாவாக மைய அரைத்துக் கொள்ளவும். மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிற மாக வதக்கவும்.

அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
பின்னர் ஊற வைத்திரு க்கும் மட்டனைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு கலந்து வேக விடவும்.
முந்திரி பழம் அளிக்கும் மருந்து !
தேவைப் பட்டால் சிறிதளவு நீர் தெளித்து எண்ணெய் மசாலா விலிருந்து பிரிந்து மேலே வரும் வரை வதக்கவும்.

பின்பு தேவையான அளவு வெந்நீர் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு, குழம்பை கொதிக்க விடவும்.

மட்டன் நன்றாக வெந்து குழம்பு கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவி இறக்கவும்.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !
கோலாபுரி மட்டன் கறி, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷ னாக இருக்கும்.
Tags: