உப்புமா கொழுக்கட்டை செய்வது எப்படி? | Uppuma pudding Recipe !





உப்புமா கொழுக்கட்டை செய்வது எப்படி? | Uppuma pudding Recipe !

ஆரோக்கிய மான அசத்தலான சத்துள்ள உப்புமா கொழுக் கட்டையை அரை மணி நேரத்திற்குள் செய்து விடலாம். 

உப்புமா கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - ஒரு கப்

பச்சரிசி -1 டம்ளர்

பச்சை மிளகாய் - 2

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

கடுகு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். 

பிறகு பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு,

கோதுமை ரவையை அதில் கொட்டிக் கிளறி அரைவேக்காட்டில் இறக்கவும்.

இதில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இதமான சூட்டில் கொழுக்கட்டை யாகப் பிடித்து, ஆவியில் வே கைவயுங்கள்.

உப்புமா சாப்பிட அடம் பிடிக்கிற வர்களும் இந்தக் கொழுக் கட்டையை விரும்பிச் சுவைப் பார்கள். 

இதனை வேறு முறையிலும் செய்யலாம்.. 

பச்சரிசியைச் சுடுதண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.தனியே ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும்.

அரிசியைக் களைந்து அதனுடன் துருவிய தேங்காயில் பாதியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும்.

கடுகு, கடலைப் பருப்பு, வெள்ளை உளுத்தம் பருப்பு, கறிவேப்பி லையை வாணலியில் போட்டு தாளித்து அரைத்த அரிசியைச் சேர்க்கவும். 

அதனுடன் பாதி தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். கொதிக்கும் நீரில் வதக்கிய அரிசிக் கலவையைச் சேர்க்க வேண்டும்.

உப்புமா விற்குக் கிளறுவது போல் கிளற வேண்டும். உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு உருண்டைகள் உருட்டவும். 

இட்லிக் குக்கரில் தண்ணீர் விட்டு இட்லித் தட்டுகளில் உருட்டிய உருண்டை களை வைத்து ஆவியில் வேக வைக்கவும். கொழுக்கட்டை வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
Tags: