தேவையானவை
பாசுமதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி பெரிய சைஸ் - 2
புதினா (ஆய்ந்தது) - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு - 10
பட்டை, கிராம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* தக்காளி, புதினா, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காய த்தில் சிறிது ஆகியவ ற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
* வாணலியில் நெய், எண்ணெய் கலவையை விட்டு பட்டை, கிராம்புத் தூள் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
* பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு, வதக்கிய கலவையைச் சேர்க்கவும்.
அத்துடன் தேங்காய்ப் பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
அத்துடன் தேங்காய்ப் பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
* வெந்ததும் தக்காளி பிரைடு ரைஸ் ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.