தேவையானவை:
பாசுமதி அரிசி – 2 கப்,
பால் – 2 கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு,
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2,
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா ஒன்று,
பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து…
வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் நன்கு வதக்க வும்.
இதனுடன் பால், தண்ணீர் ஒரு கப், பாசுமதி அரிசி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடவும்.
பின்னர் நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி.. பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவி, பரிமாறவும்.