வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட்.
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கடாய் சிக்கன் அசைவ ரெசிபி.
தேவையானவை:
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 100 கிராம் (வேக வைத்து தண்ணீர் இல்லாமல் அரைத்தது)
தக்காளி - 100 கிராம்
இஞ்சி- பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் (கீறியது) - 4
கசூரி மேத்தி (காய்ந்த வெந்தயக் கீரை) - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10 கிராம்
முழு மல்லி (தனியா) - 20 கிராம்
குடமிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் (இதழ்களாக நறுக்கியது) - ஒன்று
கொத்த மல்லித் தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்துச் சூடானதும் எண்ணெய் விடாமல், காய்ந்த மிளகாய் மற்றும் முழு மல்லி (தனியா) சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை வெண்ணீ ரில் சேர்த்து, தோலுரித்து, தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடா னதும் வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் கசூரி மேத்தி, கீறிய பச்சை மிளகாய்,
அரைத்த காய்ந்த மிளகாய் - முழு மல்லி பொடி, உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கிளறி விட்டு, தேவைப் பட்டால் சிறிது தண்ணிர் சேர்த்து வேக விடவும். பின்பு இதனுடன் கரம் மசாலாத் தூள் சேர்த்து கலக்கி விடவும்.
7 அடி நீளம்.. அது பாட்டுக்கு போனது.. அலறியடித்து ஓடிய மக்கள் !
அடுப்பில் மற்றொரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் சேர்த்துச் சூடானதும் இதழ்களாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதை சிக்கன் கிரேவி யுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கொத்த மல்லித் தழை தூவி, கடாய் சிக்கனை சூடாகப் பரிமாறவும்.
கடாய் சிக்கன், சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்