முக்கனிகளான மா, பலா, வாழையில் பலாப்பழம் இனிப்பு சுவை மிகுந்தது. இதன் மேல் தோல் கரடு முரடுமாக இருந்தாலும் பழத்தின் சுவை மட்டும் நாவிலே இருக்கும்.
பலாக்கனியை போல் பலாக்காயும் உண்பதற்கு சுவையாக இருக்கும். அப்படியே அல்ல, பலாக்காயை சொதி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்!
தேவையான பொருட்கள் :
பலாக்காய் - 1 (சிறியது)
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 6
பூண்டு பல் - 6
தேங்காய் - 1
முந்திரிப் பருப்பு - 1௦
பொடுக் கடலை - 2 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கிராம்பு - 1
யலக்காய் - 2
பட்டை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பலாக்காயின் மேல் தொலை சீவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனை சிறு துண்டுகளாக நறுக்கி உப்புப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தேங்காயைத் துருவி வைக்கவும். வாணலில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் கீறிப் போட்டு, கசகசா, பொட்டுக் கடலை,
முந்திரிப் பருப்பு - 5, சோம்பு, சீரகம் அனை த்தையும் வதக்கி, அத்துடன் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி மிருதுவாக பொடித்துக் கொள்ளவும்.
பின்னர் தேங்காயைத் துருவி வைக்கவும். வாணலில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் கீறிப் போட்டு, கசகசா, பொட்டுக் கடலை,
முந்திரிப் பருப்பு - 5, சோம்பு, சீரகம் அனை த்தையும் வதக்கி, அத்துடன் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி மிருதுவாக பொடித்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காய த்தை பொடிப் பொடியாக நறுக்கி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
திரும்பவும் வாணலில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து,
திரும்பவும் வாணலில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து,
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை கொட்டி வதக்கவும், பொன்னி றமாக வெந்ததும் அதில் தட்டி வைத்துள்ள பூண்டை போட்டு வேக வைக் கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பலாக்காய் துண்டு களுடன் அரைத்து வைத்துள்ள மசாலா வையும் போட்டுக் கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிந்து கெட்டியான பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பை நிறுத்தி வாணலை இறக்கவும்.
இந்த பலாக்காய் சொதியை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
இதே போல் காலி பிளவர், கேரட், பட்டாணி, உருளைக் கிழங்கு சேர்த்து சுவையான குருமா தயார் செய்யலாம்.
இதே போல் காலி பிளவர், கேரட், பட்டாணி, உருளைக் கிழங்கு சேர்த்து சுவையான குருமா தயார் செய்யலாம்.