இனி வீட்டிலேயே சுவையான பிட்ஸா தோசை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கிண்ணம்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
குடமிளகாய் - காரத்திற்கு ஏற்ப
சோள மணிகள் - 2 டீஸ்பூன்
பட்டாணி - தேவையான அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 3
பல் தக்காளி - 1
முட்டைக் கோஸ் - கால் கப்
கேரட் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - சிறிதளவு
சோயா சாஸ் - ஒரு துளி
சில்லி சாஸ் - ஒரு துளி
தக்காளி சாஸ் - தேவைக்கு ஏற்ப
துருவிய சீஸ் - தேவைக்கு ஏற்ப
ஒயிட் பெப்பர் - சிறிதளவு
செய்முறை :
பிட்ஸா தோசைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறி களை பொடியாக துருவி எடுத்துக் கொண்டு, ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து காய விடவும்.
நன்றாக காய்ந்தபின் அதில் வெண்ணெயை போட்டு உருக்கி நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், பூண்டு, போட்டு வதக்கவும்.
பின்னர் காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு லேசாக இரண்டு நிமிடம் வதக்கவும். அத்துடன் சோயா சாஸ், சில்லி சாஸ், ஒயிட் பெப்பர், சர்க்கரை போட்டு வதக்கவும்.
தீயை சிம்மில் வைத்து தோசை சுடவும். அதன் மேலே வதக்கிய காய்கறி கலவையை பரவலாக தூவி சமப்படுத் தவும்.
தக்காளி சாஸை தோசையில் ஆங்காங்கே தெளித்து துருவிய சீஸை போட்டு, தோசையை சுற்றி பட்டார் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான பிட்ஸா தோசை ரெடி. தோசையை 3 ஆக கட் பண்ணி ரோல் போன்றும் சாப்பிடலாம். இதில் கேப்ஸிகம், அன்னாசிப் பழம் பிடிக்காத வர்கள் தவிர்த்து விடலாம்.