சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி?





சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி?

மதுரை மீனாட்சி, மல்லி, ஜிகிர்தண்டா என பெருமைகள் பல நீண்டாலும் மதுரை ஹோட்டல்களில் கிடைக்கும் கறி தோசையின் ருசியே தனி.
சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி?
அதனை எளிதாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு சாப்பிடுங்க !
தேவையான பொருட்கள் :

மட்டன் கொத்து கறி - 200 கிராம்

தோசை மாவு - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

முட்டை - 3

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

சீரகதூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு,- அரை தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப
முடியின் வளர்ச்சிக்கு 5 விதமான காய்கறிகள் !
செய்முறை:
சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி?
கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி பஞ்சு போல் வேக வைக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, முட்டையை அடித்து வைக்கவும் (உப்பு தேவை யில்லை). வாணலி யில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும்.

அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழைந்ததும் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து பிரட்டி விடவும்.

அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும் (நீர்க்க இருக்க கூடாது).
அடுப்பை சிம்மில் வைத்து தோசைக் கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்ப மாக ஊற்றவும். 

அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும். அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். 
பிறகு மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவி விட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.

ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் சுவையான மதுரை கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவை யில்லை. 

காரசார மாக அப்படியே சாப்பிட லாம்..
Tags: