சுவையான மார்கண்டம் சூப் செய்வது எப்படி?





சுவையான மார்கண்டம் சூப் செய்வது எப்படி?

ஆட்டுக்கறியைவிட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை.. ஆட்டின் கண்கள், கபம், சளி, இருமல், நீங்கும். மார்புக்கு பலத்தை தரக்கூடியது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக் கூடியது. 

சுவையான மார்கண்டம் சூப் செய்வது எப்படி?

ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும் போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையை சாப்பிட்டால், கிட்னியில் உள்ள கசடுகளை நீக்கி விடும். மிக முக்கியமானது நெஞ்சு எலும்புகள் ஆகும்.. 

மார்கண்டம் என்று சொல்வார்கள். ஆட்டின் விலா எலும்பு பகுதியை தான் மார்கண்டம் என்பார்கள். பெரும்பாலும் இதை சூப் வைத்தே குடிப்பார்கள். 

இதற்கு காரணம், எலும்புகளை நன்றாக வேக வைக்கும் போது, எலும்பு மஜ்ஜையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளிப்பட்டு அது தான் நமக்கு முழுமையான சத்துக்களாக கிடைக்கின்றன. 

இதில், கொலாஜன், குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் போன்றவை நிறைந்துள்ளதால், மூட்டுகள் + எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

மட்டன் சூப் களில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ் நாட்டிலேயே பலவாறு மட்டன் சூப்பை சமைக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் மார்கண்டம் சூப். 

இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும். இப்போது எப்படி மார்கண்டம் சூப் செய்வதென்று பார்ப்போமா !

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

தேவையான பொருட்கள்:

மட்டன் எலும்பு (நெஞ்செலும்பு) - கால் கிலோ

தக்காளி - 200 கிராம்

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

வெங்காயம் - 200 கிராம்

பச்சை மிளகாய் - 4 பொடியாக நறுக்கியது

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

சீரகம் - 1 தேக்கரண்டி

தனியா - ஒரு கைப்பிடி அளவு

ஆட்டுக்கால் பாயா கிரேவி செய்வது எப்படி?

செய்முறை:

சுவையான மார்கண்டம் சூப் செய்வது எப்படி?

நெஞ்செலும்பை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் சிறிது எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை சேர்த்து நன்றாக  வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தொடர்ந்து எலுமிச்சை சாறு  சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

குஜராத்தி சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

இப்போது நெஞ்செலும்பு மற்றும் பொடி செய்த தனியாவை சேர்த்து, நான்கு டம்ளர் நீர் ஊற்றி நன்றாக வேகவிட்டு இறக்கினால் சுவையான மார்கண்டம் சூப் ரெடி.

Tags: