தேவையான பொருட்கள் :
சாதம் - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை :
இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
வடித்த சாதத்தை நன்றாக குழைய பிசைந்து கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மசித்த சாதம், கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவது போல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும்.
மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் உகந்தது.