தேவையான பொருள்கள் : -
ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
மோர் - 4 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 4 இலை,
இடித்த மிளகு,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை : -
ஓட்ஸ், அரிசி மாவு, மோர், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும். மிளகு சேர்த்து தேவையென்றால் தண்ணீரும் சேர்த்து தோசைமாவு பதத்தில் ஊறவிடவும்.
எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். அதில் ஊற வைத்த ஓட்ஸ் கலவையை சேர்த்து
மிதமான தீயில் 5 நிமிடங்கள் கட்டி ஆகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு இறக்கி ஈர கைகளால் கொழுக்கட்டை பிடித்து ஆவியில் 3-4 நிமிடங்கள் வேக வைத்து சூடாக சட்னியுடன் பரிமாறலாம்.