காரைக்குடி கோழி குழம்பு செய்வது எப்படி?





காரைக்குடி கோழி குழம்பு செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவருக்கென்று இருக்கும் கைப்பக்குவம், மற்றும் மசாலா அரைக்கும் பக்குவம் இவற்றை பொறுப்பு செய்யும் சமையலில் சுவை வேறுபடும். 
காரைக்குடி கோழி குழம்பு செய்வது எப்படி?
இவ்வாறு காரைக்குடியில் செய்யும் சிக்கன் குழம்பு மிகவும் காரமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த காரைக்குடி சிக்கன் குழம்பை நீங்களும் சுவைக்க வேண்டும் என்றால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

கோழி - 1/2 கிலோ

தக்காளி - 2

வெங்காயம் - 2

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)

அரைப்பதற்கு...

தேங்காய் - 1/2 மூடி

கசகசா - 1/2 டீஸ்பூன்

முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு :
கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
காரைக்குடி கோழி குழம்பு
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

மசாலா வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 8 நிமிடம் வேக வைக்கவும. சிக்கனானது ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்

மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்து, பச்சை வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவினால், காரைக்குடி கோழி குழம்பு ரெடி.

இவ்வாறு மசாலா அரைத்து ஒரு முறை நீங்களும் உங்கள் வீட்டில் இதனை முயற்சி செய்து பாருங்கள். இதன் வாசனையை வைத்தே பலரும் உங்களைக் கேட்டு விடுவார்கள் இன்று என்ன விசேஷம் சுவையான சமையல் வாசனை ஆளைத் தூக்குக்றதே என்று.
Tags: