கணவாய் மீன் வறுவல் செய்வது !





கணவாய் மீன் வறுவல் செய்வது !

தேவையான பொருட்கள் 

கணவாய் மீன் - 1 

கிலோ வெங்காயம் - 2 

தக்காளி - 2 

பச்சை மிளகாய் - 2 

புண்டு விழுது - ஒரு தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி 
நெல் சீரகத் துர்ள் - 2 

தே க எண்ணை கடுகு உளுத்தம் பயிர் கருவேப்பிள்ளை கொத்துமல்லி தழை. 

செய்முறை :
கணவாய் மீன் வறுவல்

(காரம், தொக்கு அதிகமாக வேண்டுமென்றால் மேற்கொண்டு சேர்த்தக் கொள்ளங்கள்.) முட்டை கணவா மீன் நன்றாக ஆய்ந்து கழுவி எடுத்தக்கொள்ளுங்கள். 

ஒரு வாணலில் தலைகளை மட்டும் எடுத்து இரண்டாக வெட்டி (அப்படியே கூட போடலாம். எனக்கு பார்க்க பயமாக இருப்பதால் இப்படி இரண்டாக வெட்டிவிடுவேன்.... ) 

அதனுடன் கொஞ்சம் உப்பு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 

கனவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிட வேண்டும். இப்படிக் கொட்டிவிடுவதால் கானவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும். 

பிறகு இதைத் தனியே எடுத்து வைத்துவிடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை வெட்டி.... பின்பு வாணலியை அடுப்பிலேற்றி காய்ந்ததும் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பயிரு போட்டுத் தாளித்துப்.... 

பின்பு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி... பின்பு தக்காளி, பூண்டு விழுது, கறிவேப்பிள்ளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து.... நன்றாக வதக்கியப் பின்பு...
அதில் கனவாய் மீன், ஏற்கனவே வேக வைத்த கனவா மீன் தலை, மிளகாய்த்துாள், நெல் சீரகப்பொடி, சேர்த்து.... நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். 

இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம். அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும். நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழையைக் கிள்ளி போட்டு இறக்கி விட வேண்டும். 

 கணவாய் மீன் வறுவல் ரெடி! இதுவே கணவாய் மீன் வறுவல் செய்முறை. இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.
Tags: