பாகற்காய் புலாவ் செய்முறை / Bitter gourd Pulao !





பாகற்காய் புலாவ் செய்முறை / Bitter gourd Pulao !

தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி -500 கிராம்

பாகற்காய் -200கிராம்

வெங்காயம் -1

பச்சை மிளகாய் -3

தேங்காய் பால் -1/2 கப்

இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ்பூன்

பட்டை -2

கிராம்பு -7

ஏலக்காய் -7

சீரகம் -1/2 ஸ்பூன்

சர்க்கரை -1சிட்டிகை

புதினா, கொத்த மல்லி - தேவையான அளவு

உப்பு, வெண்ணெய், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

பாகற்காயை கசப்பு போவதற்காக அரைமணி நேரம் தயிரில் ஊற வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும், பின் பச்சை மிளகாய் போட்டு லைட்டாக வதக்கவும்.

பாகற்காய் புலாவ் செய்முறை

பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து கிளறி சீரகம் போட்டு லைட்டாக வதக்கினால் போதுமானது இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, புதினா, கொத்த மல்லி தூவி வதக்கவும்.

ஒரு கப்பிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் கடாயில் ஊற்றி மீதமுள்ள தேங்காய் பாலையும் இதில் கலந்துக் கலாம். தயிரில் ஊற வைத்த பாகற்காயை மட்டும் கழுவி போட வேண்டும். 

பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். எலுமிச்சை பழச்சாறு பிழிந்து விட வேண்டும்.

தண்ணீர் கொதி வந்த பிறகு அரிசியை சேர்த்து வேக விட்டு தம் கட்டி இறக்கினால் சுவையான பாகற்காய் புலாவ் தயார். விரும்பினால் பட்டர் அல்லது நெய் கலந்து கிளறி பரிமாறலாம்
Tags: