புழுங்கல் அரிசி பிரியாணி செய்வது எப்படி?





புழுங்கல் அரிசி பிரியாணி செய்வது எப்படி?

புழுங்கல் அரிசி என்றாலே அது கனமாக இருக்கும். ருசி இருக்காது என்று பச்சை அரிசியை தான் பலரும் விரும்புகிறார்கள். 
புழுங்கல் அரிசி பிரியாணி செய்வது எப்படி?
அறுவடைக்கு பிறகு நெல்லை ஊற வைத்து, வேகவைத்து மற்றும் உலர்த்துதல் உள்ளிட்ட மூன்று நிலைகளுக்கு பிறகு புழுங்கல் அரிசி பெறப்படுகிறது. இது மாவுச்சத்தை குறைக்கிறது. 

இது ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருக்கும்.  புழுங்கல் அரிசி ஊற வைத்து, வேக வைத்து, உலர்த்துவது என மூன்று நிலை செயல்முறைகளால் பெறப்படுகிறது. 

வேக வைத்த அரிசி என்பதால் ஜீரணிக்க எளிதாக்குகிறது. இது குடல் செயல்பாட்டை மீட்டெடுக்கிறது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தவும் புழுங்கல் அரிசி உதவுகிறது. 
இது ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பைட்டோ ந்யூட்ரியண்ட்கள் நிறைந்தவை. 

புழுங்கல் அரிசியில் உள்ள ஆந்தோசயின்களின் அதிக உள்ளடக்கம் வீக்கத்தை குறைக்க உதவுகிறது மற்றும் புற்றுநோயின் அனைத்து அறிகுறிகளையும் தடுக்கிறது.
தேவையானவை:

புழுங்கலரிசி - 2 கப்,

பெரிய வெங்காயம் - 3,

தக்காளி - 4,

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்,

தயிர் - அரை கப்,

தேங்காய்ப்பால் - அரை கப்,

கேரட் - 1,

பீன்ஸ் - 8,

உருளைக்கிழங்கு (விருப்பப் பட்டால்) - 1,

புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி,

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
பிரிஞ்சி இலை - 2,

நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க:

பட்டை,

லவங்கம், ஏலக்காய் - தலா 2 (தனியாக அரைக்க வேண்டும்),

இஞ்சி - ஒரு துண்டு,

பூண்டு - 6 பல் (தனியாக அரைக்க வேண்டும்),

பச்சை மிளகாய் - 3,

தனியா - ஒரு டேபிள்ஸ்பூன் (தனியாக அரைக்க வேண்டும்).
தக்காளி குருமா செய்வது எப்படி?
செய்முறை:

புழுங்கல் அரிசி பிரியாணி செய்வது எப்படி?
புழுங்கலரிசியை நன்கு கழுவி ஊற வையுங்கள். காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்குங்கள்.

குக்கரில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து பிரிஞ்சி இலை போட்டுத் தாளித்து, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். 

வதங்கியதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதனுடன் சேர்த்துக் கிளறுங்கள். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பட்டை, லவங்க விழுதைச் சேர்த்து வதக்குங்கள்.

ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு, பச்சை மிளகாய், தனியா விழுதைச் சேர்த்து, ஐந்து நிமிடம் கிளறிய பின், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்குங்கள்.

அனைத்தும் சேர்ந்து பச்சை வாசனை போக வதங்கிய பிறகு, புதினா, மல்லித் தழை, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி தயிரைச் சேருங்கள். 
மூளையை பாதிக்கும் விஷயம் !
அத்துடன், ஐந்தரை கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊற்றி, மீண்டும் கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்தபின், அரிசியை சேர்த்து, தேவையான உப்பும் போட்டு, மூடி வையுங்கள்.

2 விசில் வந்ததும் அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
Tags: