உடுப்பி சாம்பார் செய்முறை / Udupi Sambar Recipe !





உடுப்பி சாம்பார் செய்முறை / Udupi Sambar Recipe !

வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் செய்யும் இந்த சாம்பார் பற்றிய குறிப்பினை சமீபத்தில் ஒரு நாளிதளில் பார்த்தேன்.
 உடுப்பி சாம்பார்
செய்து பார்த்ததில் சுவை உடுப்பி ஓட்டல் சாம்பார் போன்றே இருந்தது. நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கத்திரிக்காய் (சிறிய அளவு) - 1

உருளைக்கிழங்கு (சிறிய அளவு) - 1

வெல்லம் பொடித்தது - 1 டீஸ்பூன்

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் (நடுத்தர அளவு) - 3 அல்லது 4

தனியா - 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் ஒரு கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் ஆகிய வற்றைச் சேர்த்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

ஒரு வாணலி யில் சிறிது எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய வற்றை

ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். கடைசியில் கறிவேப்பி லையைப் போட்டு சற்று வதக்கி, 

பின்னர் அத்துடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து, வறுத்த
பொருட்கள் எல்லவ ற்றையும் ஒன்றாகப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத் தெடுத்துக் கொள்ளவும்.

கத்திரிக் காய், உருளைக் கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்து, புளித் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பி லேற்றி அதில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.

கடுகு வெடிக்க ஆரம்பி த்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, 

காய்கறி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து,

மூடி வைத்து வேக விடவும். காய் நன்றாக வெந்ததும் அதில் புளித்தண்ணீரை விடவும்.

அத்துடன் உப்பு, வெல்லம் ஆகிய வற்றையும் சேர்த்து, கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள பருப்பு, 

அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு,

தேவைப் பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

கவனிக்க: 

நான் கத்திரிக்காய், உருளைக் கிழங்கு மட்டும் இதில் சேர்த்து ள்ளேன். பறங்கிக் காய், கேரட் ஆகிய வற்றையும் சேர்க்கலாம்.
Tags: