புதினா புலாவ் செய்முறை / Pulao Mint !





புதினா புலாவ் செய்முறை / Pulao Mint !

காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்யுங்கள்.

புதினா புலாவ்
இது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்: 

பாசுமதி அரிசி - 1 கப் 

வெங்காயம் - 1 (நறுக்கியது) 

உருளைக் கிழங்கு - 1 (நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் 

கிராம்பு - 2 

ஏலக்காய் - 1 

பட்டை - 1/2 இன்ச் 

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

அரைப்பதற்கு... 

புதினா - 1 கட்டு 

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 

தக்காளி - 1/2 

பச்சை மிளகாய் - 1 

செய்முறை: 

முதலில் அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் புதினா, தேங்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பின் உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். 

இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8-10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், புதினா புலாவ் ரெடி!
Tags: