உங்களுக்கான சமையல் குறிப்புகள் !





உங்களுக்கான சமையல் குறிப்புகள் !

வெங்காய அடை செய்யும் போது : - 

வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால்,
உங்களுக்கான சமையல் குறிப்புகள் !
கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

வெண்டைக்காய் சமைக்கும் போது : - 

வெண்டைக்காய் சமைக்கும் போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

அரிசி உப்புமா செய்யும் போது : - 

அரிசி உப்புமா செய்யும் போது அதில் கொஞ்சம் வேக வைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
குழம்பில் தேங்காய் பயன்படுத்தும் போது : - 

தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டு மானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள்.

மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கி விட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

கீரையை வேக விடும்போது : - 
உங்களுக்கான சமையல் குறிப்புகள் !
கீரையை வேக விடும் போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

பாகற்காய் கெடாமல் இருக்க : - 

பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும்.

தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
தயிர் புளிக்காமல் இருக்க : - 

தயிர் புளித்து விடும் என்ற நிலை வருகிற போது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

மோர் மிளகாய் தயாரிக்கும் போது : - 

மோர் மிளகாய் தயாரிக்கும் போது அத்துடன் பாகற்காய் களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்க லாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

முட்டையை வேக வைக்கும் போது : - 

முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும்.

அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

பாலை காய்ச்சுவதற்கு முன் : - 

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு : - 
உங்களுக்கான சமையல் குறிப்புகள் !
பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க: - 

தோல் உரித்த உருளைக் கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.
எண்ணெய் கறையை அழிக்க : - 

எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
Tags: