தேவையான பொருள்:
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
சின்ன வெங்காயம் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
சோம்பு – சிறிது
மிளகாய் வத்தல் - 2
மிளகாய் வத்தல் - 2
வாழைப்பூ - தேவைக்கு
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிது
செய்முறை:
முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாழைப்பூவை நரம்பு எடுத்துத் தனியாக அரைக்கவும். இப்போது நன்கு ஊறிய பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், உப்பு
இவற்றைச் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த வாழைப் பூவையும், வெங்காய த்தையும் இதனுடன் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
இப்போது வாழைப்பூ வடை தயார். சிறுநீரகத்தில் கோளாறு இருப்பவர்கள் இதனைச் சாப்பிடலாம்.
மாலை நேரத்தில் குடிக்கும் தேநீரோடு இதனைச் சேர்த்து சாப்பிடுவதும் தனிச் சுவையாக இருக்கும்.
மாலை நேரத்தில் குடிக்கும் தேநீரோடு இதனைச் சேர்த்து சாப்பிடுவதும் தனிச் சுவையாக இருக்கும்.