தேவையானவை:
ஓட்ஸ்- 1 கப்
பச்சரிசி மாவு- 1 கப்
தேங்காய்த் துருவல்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
காயம்- சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
தூவ:
மிளகாய்த் தூள்- சிறிதளவு
மிளகுத் தூள்- சிறிதளவு
இட்லி மிளகாய்ப் பொடி- 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. மின்னரைப் பானில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும்.
2. திரித்த ஓட்ஸ், அரிசி மாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.
3. வழக்க மாகக் கொழுக் கட்டைக்குச் செய்வது போல சுடு தண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.
4. தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.
5. அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.
6. இட்லிப் பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக் கட்டைகளை அடுக்கவும்.
7. ஆவியில் வேக விடவும்.